×

போடியில் தென்னந்தோப்பு விற்பதாக ரூ.6 லட்சம் வாங்கி மோசடி: பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு

 

போடி, பிப். 25: போடியில் தென்னந்தோப்பை விற்பதாக கூறி ரூ.6 லட்சம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். போடி டிவிகேகே நகரை சேர்ந்தவர் நல்ல பெருமாள். இவரது தோப்பில் தென்னை மரங்கள் வளர்த்து வருகிறார். இந்த தோப்பு இவரது மனைவி ஈஸ்வரி பெயரில் உள்ளது. இந்நிலையில் போடி வென்னிமலை தோப்பு பகுதியை சேர்ந்த தீபக்குமார் என்பவர், போடி குலாலர் பாளையத்தை சேர்ந்த ரவிக்கு ஈஸ்வரி பெயரில் உள்ள தென்னந்தோப்பை விலை பேசி முன் அட்வான்ஸாக ரூ.6 லட்சம் பெற்றார்.

மேலும் விரைவில் பத்திரப்பதிவு செய்து மீதி பணத்தை பெற்று கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் பல மாதங்களாக கடந்த நிலையில் பத்திரப்பதிவு செய்து தராமல் ஈஸ்வரியும், தீபக்குமாரும் சேர்ந்து வேறு ஒரு நபருக்கு தென்னந்தோப்பை விற்று பத்திரப்பதிவு செய்து விட்டனர். இதையறிந்து ரவி கேட்ட போது பத்திரத்தில் ஒரு மாதத்திற்குள் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக எழுதி கொடுத்தனர். ஆனால் சொன்னபடி ரூ.6 லட்சம் பணத்தை தரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த ரவி, இதுகுறித்து தேனி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். எஸ்பி உத்தரவின் பேரில் போடி நகர் எஸ்ஐ இளங்கோ ஈஸ்வரி, தீபக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போடியில் தென்னந்தோப்பு விற்பதாக ரூ.6 லட்சம் வாங்கி மோசடி: பெண் உள்பட 2 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Nalla Perumal ,Bodi TVKK ,
× RELATED போடி அருகே வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி விறுவிறு